கொரோனா பாதுகாப்பு தொற்று நீக்கி விசிறல்…
ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோணா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பு கருதியும் பொது இடங்களில் திரவ தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வீதிகள், வியாபார நிலையங்கள், வங்கிகள், திணைக்களங்கள் உட்பட்ட பல்வேறு இடங்களில் திரவ தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.நௌபர் தலைமையில் இடம்பெற்ற தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கையில் பிரதி தவிசாளர் அஹமட் லெப்பை, சபை உறுப்பனர்கள், சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முப்பத்தியொரு பேருக்கான கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை