கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் பலி – கிளிநொச்சி நாச்சிக்குடாவில் சம்பவம்…

கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் பலியாகிய சம்பவம் இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
நாச்சிக்குடா கடல்பரப்பில் களங்கட்டி பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வந்ததுடன் முழங்காவில் வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 25 வயதுடைய M.யோனகன் என்ற 3 மாத குழந்தை ஒன்றின் தந்தையாவார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாச்சிக்குடா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.