மற்றுமொரு நாடாளுமன்ற ஊடகவியலாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி – இதுவரை இருவர் பாதிப்பு; அச்சத்தில் ஏனைய செய்தியாளர்கள்…

மற்றுமொரு
நாடாளுமன்ற ஊடகவியலாளருக்கு
கொரோனா வைரஸ் தொற்று உறுதி

– இதுவரை இருவர் பாதிப்பு; அச்சத்தில் ஏனைய செய்தியாளர்கள்

சிங்கள பத்திரிகைப் ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் நாடாளுமன்ற செய்தியாளராகக் கடமையாற்றி வந்துள்ளார்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக நாடாளுமன்றம் சென்ற இரண்டாவது ஊடகவியலாளருக்கும் தற்போது கொரேனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதலாவதாகக் கொரோனா தொற்றுக்குள்ளானவர், ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளராவார்.

நாடாளுமன்றச் செய்தியாளர்கள் இருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையடுத்து அவர்களுடன் நாடாளுமன்றத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஏனைய ஊடகவியலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.