ஏழைகளுக்கு “நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு” எனும் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் காரைதீவில் வீடுகள் கையளிப்பு !

ஏழைகளுக்கு “நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு” எனும் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் காரைதீவில் வீடுகள் கையளிப்பு !

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் “நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு” எனும் கொள்கைக்கு அமைய உற்பத்தித்திறன் மிக்க ஒரு பிரஜை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழும் ஒரு குடும்பத்தை உருவாக்கும் நோக்கில் சௌகரியமான ஒரு வீட்டினை நிர்மாணித்து கொடுப்பதன் மூலம் பொருளாதார இலக்கினை அடைந்து கொள்வதற்காக அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு நிலையான வெற்றியை பெற்றுக் கொடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நோக்கத்தை அடைந்து கொள்ளும் பொருட்டு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டிடப் பொருட்கள் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக்க அநுருத்த, மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேரா, அவர்களின் நெறிப்படுத்தலில் நாடு பூராகவும் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காரைதீவு 01ஆம், 05ஆம் ,08ஆம் பிரிவுகள் மற்றும் மாவடிப்பள்ளி கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீடுகள் (01) இன்று கையளிக்கப்பட்டன.

காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட மேலதிக முகாமையாளர் ஏ.எம். இப்ராஹிம் அவர்களும் மேலும் உதவி முகாமையாளர் திருமதி வீ..வளர்மதி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் காரைதீவு பிரதேச செயலக வீடமைப்பு தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். அர்ஷத் மற்றும் கிராம சேவகர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.