11 ஆயிரத்தைக் கடந்தது ‘கொரோனா’ இன்றும் 397 பேருக்குத் தொற்று உறுதி

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று மாத்திரம் 397 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமூகத்தில் இருந்த 356 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 41 பேருக்குமே இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 60 ஆக உயர்வடைந்துள்ளது. வைத்தியசாலைகளில் தற்போது 6 ஆயிரத்து134 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 905 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
……..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.