கொரோனா 3 மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் தெரிவித்த கருத்து

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இன்றும், நேற்றும் உயிரிழந்த மூன்று பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மகக்ள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க, 21,22 மற்றும் 23ஆவது கொரோனா மரணங்கள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளர்கள் என்பதால் இன்று வீடுகளிலேயே தொற்று ஏற்பட்டுவிட்டது. இதனைத் தடுப்பதற்காக சுகாதார அமைச்சு ஏன் கண்டஇடங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிரடியாக செய்வதில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் வன்னியாராச்;சி, வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட மற்றும் எமது வலையமைப்பில் இருந்தவர்களே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனையின்போது கொரோனா தொற்றுடையவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது என்று பதிலைக் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.