பெண் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

அட்டன், தும்புருகிரிய பகுதியை சேர்ந்த பெண் நபரொருவருக்கு நேற்று (04.11.2020) இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அட்டன் – டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எஸ்.எஸ். மெதவல தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்பைபேணிய 6 குடும்பங்களைச்சேர்ந்த 18 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் கடந்த 2 ஆம் திகதி அட்டன், கார்கில்ஸ் புட்சிட்டிக்கு சென்றுள்ளார். இதனால் அந்நிறுவனத்தின் வளாகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.