நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 12 ஆயிரத்தை தாண்டியது …..

நாட்டில் மேலும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, திவூலபிட்டி – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9492 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நேற்றைய தினம் மேலும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5ஆயிரத்து 755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.