இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிறந்த தினத்தில் இரத்ததான முகாம்; 500 க்கு மேற்பட்டோர் இரத்த கொடையாளர்களாக பங்கேற்பு .

“உதிரம் கொடுத்து உயிரை காப்போம்” எனும் தொனிப்பொருளுக்கமைவாக
முற்போக்குத் தமிழர் அமைப்பினால் இரத்ததான முகாமொன்று இன்று(15) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு வில்லியம் ஆல்ட் மண்டபத்தில் முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைையில் அவரது பிறந்த நாளான இன்றைய தினத்தில் இவ் இரத்ததான நிகழ்வு ஒழுங்கமைக்கப்படடிருந்தது.

இவ் இரத்ததான முகாமிற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவின் வைத்திய குழுவினர் வருகை தந்திருந்ததுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய முகாமையாளர் நா.சசீதரன் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு இடம்பெற்ற இரத்ததான முகாமில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் துணைவியார் மற்றும் முற்போக்குத் தமிழர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், முற்போக்கு இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரத்ததான முகாமில் சுமார் 500 இற்கு மேற்பட்டோர் இரத்த கொடையாளர்களாக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.