கந்தளாய் பிரதேசத்தில் கொவிட் 19 பரவலை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

திருகோணமலை -கந்தளாய் பிரதேசத்தில் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் முகமாக பொது மக்களை விழிப்பூட்டும் வகையில் விழிப்புணர்வு  நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
கந்தளாய் பொலிஸாரும், கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பும் இணைந்து இன்று (15) வாராந்த சந்தைக்கு வரும் மக்களை விழிப்பூட்டும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் எவ்வாறான விதத்தில் நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் பொதுமக்களுக்கு தெழிவூட்டப்பட்டது.
இதேவேளை முச்சக்கர வண்டியின் ஊடாக விழிப்புணர்வு பிரச்சார அறிவுறுத்தல்களை விடுத்துள்ள இதேவேளை இஞ்சி, கொத்தமல்லி போன்ற பானங்களையும் வழங்கினர்.
குறிப்பாக வேறு இடங்களில் இருந்து வருகைதரும் நபர்களை பொலிசாருக்கு தெரியப்படுத்துவதுடன்,பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் அறிவிக்குமாறு பிரச்சாரத்தின் போது பொது மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
(பதுர்தீன் சியானா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.