இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டு; காரைதீவில் பொது மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் .
நாடு முழுவதும் இளம் தொழில் முனைவோருக்கு ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இத்திட்டத்தின் விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த மாதம் 31ஆம் திகதி என்று முன்பு அறிவிக்கப்பட்டது. எனினும், அது பின்னர் நவம்பர் பதினைந்தாம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது .இதற்கமைய இறுதி நாளான இன்று அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலகத்தில் பொது மக்கள் தங்கள் விண்ணப்ப படிவங்ககளை கையளிப்பதற்காய் ஆர்வத்துடன் வருகை தந்ததை காணக்கூடியதாகவிருந்தது மேலும் இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது விண்ணப்பங்களை கையளித்தனர் .
கருத்துக்களேதுமில்லை