கல்முனை கல்வி வலயம் சிறந்த பெறுபேற்றினை ஈட்டியுள்ளது -கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவேனேந்திரன்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தில் 376 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவேனேந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வலயத்தில் கல்முனைக் கோட்டத்தில் 109 மாணவர்களும்,
கல்முனை தமிழ் பிரிவு கோட்டத்தில் 114 மாணவர்களும்,
சாய்ந்தமருது கோட்டத்தில்- 60 மாணவர்களும் காரைதீவு கோட்டத்தில் 37 மாணவர்களும்,
நிந்தவூர் கோட்டத்தில் 56 மாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இம்மாணவர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும்  மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.