தம்பலகாமம் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த யுவதி திடீர் மரணம்…

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த யுவதி மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (16)  மாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த யுவதி  தம்பலகாமம்-கல்மெடியாவ , இலக்கம் 147 எக்ஸத் மாவத்த பகுதியைச் சேர்ந்த ஹேவாநம்பிகே சுபோதா பியங்கனி (31வயது) எனவும் தெரியவருகின்றது.
தம்பலகாமம் நோர் லங்கா ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த யுவதியின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு  எடுத்துச் செல்லப்பட உள்ளதாகவும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை உயிரிழந்த யுவதிக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதற்காக மாதிரிகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.