சம்மாந்துறை கல்வி வலயத்தில் புலமை பரிட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று வலயத்தில் முதலிடம்…

நடைபெற்று முடிந்து வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிட்சையில் சம்மாந்துறை கல்வி வலய நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை ஹொலிக் குறோஸ் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் புலமை பரிட்சை எழுதி 191 புள்ளிகளைப் பெற்று சம்மாந்துறை வலயத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற ஜொனிப் பிரபாகரன் ஷான் ஜொகிர்தன் சம்மாந்துறை வலயத்திருக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் இப் பாடசாலையில் ஐோ. நிலுக்க்ஷி 184 புள்ளிகளையும்,மே. ஸ்ரேலின் 177 புள்ளிகளையும், ச.பிரியதர்சிக்கா 167 புள்ளிகளையும், ஏஸ்.சுகான் 160 பள்ளிகளையும்,க.சதுர்சினி 169 புலிகளையும் பெற்று மொத்தமாக பாடசாலையின் 6 மாணவர்கள் நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து. சம்மாந்துறை வலயத்திருக்கும்  பாடசாலைக்கும் பெருமையினை பெற்றுக் கொடுத்திருந்தனர்.

மேலும் அதிபர் அருட் சகோதரி சிறிய புஸ்பம், ஆசிரியர் திரு. எஸ். லோகேஸ்வரன் ஆகியோருக்கு இம் மாணவர்கள் பாடசாலை அதிபருக்கும் கற்பித்த ஆசிரியருக்கும் நன்றியை தெரிவித்து இருந்தனர்.

இக்கிராமத்தில் போக்குவரத்துக் கூட இல்லாமல் இம்மாணவர்கள் முச்சக்கரவண்டியில் கல்முனைக்கு சென்று தற்போது நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையிலும் தனது கல்வியினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.