யாழ்-சிகிச்சையை முடித்த 33 பேர் நேற்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ்-போதனா வைத்தியசாலையின் கீழ் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இயங்கும் covid-19 சிகிச்சை நிலையத்தில் இருந்து சிகிச்சையை முடித்த 33 பேர் நேற்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் தலைவரின் அனுசரணையில் வீடுகளுக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் வேப்ப மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
சிகிச்சை பெற்றவர்களில் இருவர் சிறப்பாக செயற்பட்டமைக்காக யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் விசேட சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதே சமயம் புதிதாக நேற்று காலை 24 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். தற்போது 148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை