வவுனியா பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை

 வவுனியா நகர பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

நகர பள்ளி வாசலின் ஏற்பாட்டில் நசார் தலைமையில் இடம்பெற்ற இப் பிரார்த்தனையில் சித்திக் ளெலவி அவர்கள் துஆ பிரார்த்தனை செய்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஆசி வேண்டியும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் பிரார்த்தனை இடம்பெற்றது.
இதில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ன, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ லால் சில்வா, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு, நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி, பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களின் இணைப்பாளர் லியாகத்தலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.