புதுக்குடியிருப்பில் கறுப்பாக மாறிய கிணற்று நீர் !
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணறொன்றின் நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறிய அதிசய சம்பவம் ஒன்று நேற்று(20) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருவதோடு குறித்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை