7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொழும்பு மாவட்டத்தில் கொரோனா – 2 நாட்களில் மட்டும் 13 பேர் சாவு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்று (நவம்பர் 22) வரை கொழும்பு மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அங்கு நேற்றுமுன்தினமும் நேற்றும் மாத்திரம் 500 இற்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 13 பேர் சாவடைந்துள்ளனர்.

அத்துடன், மூன்றாவது அலைமூலம் கம்பஹா மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 650 இற்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.