4, 193 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில்! 2 நாட்களில் 20 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனை!!

இலங்கையில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4 ஆயிரத்து 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொரோனாப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த இரு நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்களிலும் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் 891 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கொரோனாப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.