14,496 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (24) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 337 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டவர்கள். குறித்த தொற்றாளர்களில் 189 பேர் கொழும்பு மாவட்டம், 47 பேர் கம்பஹா மற்றும் 11 பேர் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று (24) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,974 பேர் ஆகும். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணி 13,915 மேலும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணி தொற்றாளர்களில் மொத்தம் 10,691 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் 23 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,507 ஆகும். அவர்களில் 14,496 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று காலை வரை 5,921 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (24) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 03 மரணங்கள் பதிவாகியுள்ளது. அவர்கள் கொழும்பு 14, மட்டக்குளி, மற்றும் ஹெஹின்துடுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதனடிப்படையில் 23 ஆம் திகதி காலை வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 90 ஆகும். இன்று காலை (24) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 428 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (24) காலை அபுதாபியிலிருந்து EY 264 விமானம் ஊடாக 50 பயணிகளும்,கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 50 பயணிகளும், டோகாவில் இருந்து UL 218 விமானம் ஊடாக 88 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (24) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,490 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 23 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 10,679 ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.