யாழ்- நல்லூரில் பெண்ணொருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி

யாழ்ப்பாணம், நல்லூரில் 72 வயதுடைய பெண்ணொருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக பரிசோதனைக்கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மூவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 11ஆம் திகதி கொழும்பிலிருந்து நல்லூர் கோவில் வீதிக்கு வந்து சுகாதாரப் பதிவு ஒன்றுக்கும் உட்படாத நிலையிலிருந்த பெண்ணொருவர் சுகாதார அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சில நாட்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் காங்கேசன்துறை கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படையினர் இருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.