பொத்துவில் ஸ்ரீ ஆலயடிப்பிள்ளையார் ஆலயத்தில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம்…

பொத்துவில் ஸ்ரீ ஆலயடிப்பிள்ளையார் ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது 04.12.2020 பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பொத்துவிகல் ஆலயடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கோபிநாதசர்மா குருக்கள் தலைமையில் மற்றும் சிவ ஸ்ரீ யோகேஸ்வரன் குருக்கள். சிவ ஸ்ரீ காண்டிபன் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடனா அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், ஆலய தலைவர் எஸ். கந்தசாமி. ஆலயநிர்வாகத்தினர், அதிகாரிகள்,கலாச்சார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.