சிவநேசத்துரை சந்திகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை, ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சூசைதாசன் முன்னிலையில் இன்று (08) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி உள்ளிட்ட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் இவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.