கிளிநொச்சியில் பெண்களிற்கு எதிரான வன்முறை தொடர்பான சர்வதேச விழிப்புணர்வு செயற்திட்டத்தின் 16ம் நாள்நிகழ்வுகள்

பெண்களிற்கு எதிரான வன்முறை தொடர்பான சர்வதேச விழிப்புணர்வு செயற்திட்டத்தின் 16ம் நாள் நிகழ்வுகள்  மனித உரிமைகள் நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது.
பெண்களிற்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் சர்வதேச நிகழ்ச்சி திட்டம் 16 நாட்களாக இடம்பெற்று வந்தது. கடந்த 25ம் திகதி ஆரம்பமான குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவு நாளான இன்று கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண்களின் பிரதிநிதிகளை அழைத்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் சங்கரப்பிள்ளை றொபின், அமரா போராத்தின் எஸ்.துசாநந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.