இராஜாங்க அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர மட்டக்களப்பிற்கு விஜயம்….

பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளுர் அடை வடிவமைப்பு இராஜாங்க அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கைத்தறி மற்றும் உள்ளுர் ஆடை வடிவமைப்பு உற்பத்தி தொடர்பான விடயங்களை கண்கானிக்க விஜயம் ஒன்றை இன்று (11) மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமபன கே. கருணாகரனை சந்திக்கும் நிகழ்

வொன்று இன்று (11) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் வினாயகமூர்த்தி முரளிதரன், மேலதி அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, கிழக்கு மாகாண தொழில்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே. இளங்குமுதன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. தயாபரன் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன்போது இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கைத்தறி, பிடவைக் கைத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி தொடர்பாகவும், அவற்றுக்கான சந்தை வாய்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.