கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 473 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 473 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.
நேற்றையதினம் (11) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 762 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் (கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 445 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 135 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 36 பேரும் அடையாளம்)
இன்று (12) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,613 இலிருந்து 31,375 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,831 இலிருந்து 23,304 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 604 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை