வயோதிபர்கள் 92 பேர் கொரோனாவால் சாவு…

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை மூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 92 பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 – 30 வயதுக்கிடைப்பட்ட 3 பேரும், 31- 40 வயதுக்கிடைப்பட்ட4 பேரும், 41 – 50 வயதுக்கிடைப்பட்ட 13 பேரும், 51 – 60 வயதுக்கிடைப்பட்ட 23 பேரும், 61 – 70 வயதுக்கிடைப்பட்ட 29 பேரும், 74 வயதுக்கு மேற்பட்ட 64 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.