தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 41 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 41  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில்  ஆயிரத்து 390  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும்  தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.