ஜனாஸா எரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்

ஜனாஸா எரிப்புக்கு எதிரான   கவனயீர்ப்பு போராட்டம்  அம்பாறை மாவட்டம்  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின்  ஏற்பாட்டில்  சாய்ந்தமருது அல் ஹிலால் பாடசாலைக்கு அருகாமையில் இன்று  (24) மதியம்  இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின்  போராட்டமானது குறித்த பள்ளிவாசலில்  ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில்  பிரதான வீதிக்கு சென்றடைந்து பின்னர் முடிவுறுத்தப்பட்டது.

இதில்  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை    செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டதுடன் இப்போராட்டத்தில்   ஜனாஸா எரிப்புக்கு எதிரான வாசகங்கள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன.

இவ்வாசகங்களில்  நிபுணத்துவர்களா?இல்லை பழி தீர்க்கும் காடையர்களா? ஏமாற்றாதே புதைக்க வழி இல்லை என ஏமாற்றாதே வழங்கி விடு வழங்கி விடு முஸ்லீம் கிறிஸ்தவ உரிமையை வழங்கி விடு ஜனாதிபதியே பிரதமரே பிஞ்சுக் குழந்தையை தீயில் கருக்கியது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா   போன்றவை    குறிப்பிடப்பட்டிருந்தன.

 

(பாறுக் ஷிஹான்)

 


 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.