புதிய அரசமைப்பினை உருவாக்கும்வரை மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது-சரத்வீரசேகர

புதிய அரசமைப்பினை உருவாக்கும்வரை மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர வேண்டுகோள் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைகள் தொடர்பான புதிய சட்டங்கள் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மாகாணசபைகள் குறித்த தனது கருத்தினை தான் பலமுறை வெளிப்படுத்திவிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒருநாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்,ஒன்பது மாகாணங்களிலும் வெவ்வேறு சட்டங்கள்கள் காணப்பட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கம் மாகாணசபைகள் முறையை முற்றாக நிராகரிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் தற்போதையசூழ்நிலைகள் காரணமாக புதிய அரசமைப்பினை உருவாக்கும்வரை மாகாணசபை தேர்தல்களை பிற்போடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.