மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில இடங்கள் நாளை (28) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

அதன்படி நாளை அதிகாலை 5 மணி முதல் டாம் வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளில் விதிக்கப்பட்ட தனிமைபடுத்தல் உத்தரவு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு 2 இல் உள்ள வேகந்தை மற்றும் ஹுனுபிட்டிய பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு வெள்ளவத்தையில் மயூரா பிளேஸ் மற்றும் ஹல்கவத்தை, பொரளையில் Kalipullawatte, Laksanda Sevana ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.