திருகோணமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காராணமாக 1911 குடும்பங்கள் பாதிப்பு -மாவட்ட அரசாங்க அதிபர்

திருகோணமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காராணமாக 1911 குடும்பங்களைச்சார்ந்த 6617 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
இவர்களுள் அதிகபட்சமாக பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவில் 1104 குடும்பங்களின் 3849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1380 குடும்பங்களைச்சேர்ந்த 4829 பேர் உறவினர் வீடுகளில் தங்கியிருந்ததுடன் மொத்தமாக 4 வீடுகள் முழுமையாகவும் 43 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வீடுகளது இழப்புக்கள் பிரதேச செயலகம் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் முதல்கட்டமாக பாமிக்கப்பட்ட வீட்டுடமையாளர்களுக்கு 10000 ரூபா முற்பணம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க அதிபருடன்   அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மாவட்ட செயலகப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ் உட்பட் அதிகாரிகள் பலர் வெள்ளநீர் தேங்கிய குடிமனை சார்    பிரதேசங்களில் நீரை வெளியேற்ற கடும்பிரயத்தனத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.