கிளிநொச்சி-தட்டுவன்கொட்டியில் மிகவும் உயரமான சிவன் சிலை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன்

கிளிநொச்சி- ஆணையிறவு,  தட்டுவன்கொட்டியில் கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள நடராஜர் சிலைக்கான அடிக்கல் இன்று (28) நாட்டி வைக்கப்பட்டது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்த சிலையானது 27 அடி உயரத்தில் அமையவுள்ளதுடன் இலங்கையில் மிக உயரமானது எனவும் குறிப்பிடப்படுகிறது.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், சின்மயா மிசன் சுவாமிகள், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முதல்வர், இந்து சமய அமைப்புகளின் பிரதிநிதிகள், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.