வவுனியாவில் ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு

வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்று (28) காலை அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் ஔவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது நினைவுப் பேருரையை ஆசிரியர் உதயகுமார் நிகழ்த்தியிருந்தார்.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், கே.ராஜலிங்கம், சு.காண்டீபன், நா.சேனாதிராயா,சமூக ஆர்வலர்களான சந்திரகுமார் கண்ணன், மாதவன், விக்னா மற்றும் நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.