தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம்-கோட்டாபய

தோட்ட பகுதிகளிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கடந்த 06 ஆம் திகதியன்று கேகாலை மாவட்டத்தில் உள்ள தெரணியகல பிரதேச செயலக பிரிவில் திக்கெல்லகந்த கிராம சேவகர் பிரிவில் உள்ள திக்கெல்லகந்த கனிஷ்ட வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற ஒன்பதாவது ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி  இவ்வாறு தெரிவித்தார்.

உரையாடலின் போது திக்கெல்லகந்த கனிஷ்ட வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடமொன்றை வழங்கவும்இ ஆய்வுகூட வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. ஆசிரியர்களின் போக்குவரத்துக்கு முச்சக்கர வண்டியொன்றை வழங்குவதிலும் ஜனாதிபதி செலுத்தினார்.

எஸ்.எல்.டி மொபிடல் நிறுவனம் நன்கொடையளித்த கணினிகள் மற்றும் டயலொக் நிறுவனம் நன்கொடை அளித்த தொலைக்காட்சிகள் மற்றும் இணைப்புகள் திக்கெல்லகந்த கனிஷ்ட வித்தியாலயம், மாலிபொட தமிழ் வித்தியாலயம், உடுமாலிபொட ஸ்ரீ தேவானந்த வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்களிடம் ஜனாதிபதி வழங்கினார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்கும், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

அனைத்து பாடசாலைகளின் கணினி தேவைகளையும் ஆராய்ந்து பூர்த்தி செய்யுமாறும் ஜனாதிபதி  அறிவுறுத்தினார்.

மாலிபொடயிலிருந்து சிவனொளிபாத வீதியில் பன்தெனிய வரையிலும்இ தெரணியகலயிலிருந்து நூரி, உடமாலிபொட முதல் திக்கெல்லகந்த வரையிலும்இ மாலிபொடயிலிருந்து ஊரவனாவ, அம்பககந்த வரையிலுமாக பல வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும் நாடு முழுவதும் கிராமப்புற தோட்டங்களை அண்மித்த சிறிய உள்நுழைவு வீதிகள் மற்றும் சிறிய வீதிகளை இணைக்கும் வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை கூறிய ஜனாதிபதி இனிமேல்இ அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இப்பிரதேசங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில்இ பொல்கஸ்வத்தஇ பஸ்நாகல – ஹொரகஹஹின்ன நீர் திட்டங்களை விரைவுபடுத்தவும் மாவட்டத்தில் உள்ள நீர் மூலங்களை அடையாளம் கண்டு குடிநீர் தேவைகளை வழங்கவும் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

மாலிபொட நகரத்தை முறையான விதத்தில் அபிவிருத்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி அமைச்சுக்கும்இ புதிய வீட்டுத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு தோட்ட வீடமைப்புஇ உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

கோகாலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ மற்றும் ஏனைய ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்பவும்இ இப்பகுதியிலுள்ள காணிப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.

இதையடுத்துஇ ஜனாதிபதி அவர்கள் தெரணியகல – மாலிபொட திக்-எல்ல-கந்த ஆரம்பப் பாடசாலையில் ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வில் பங்கேற்ற போது மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கமையஇ 24 மணித்தியாலங்களில், மாலிபொட – பொத்தனிகந்த மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தைப் புனரமைக்கும் பணிகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பில் பிரதேச மக்கள் ஜனாதிபதி உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.