மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான ஊழியர்கள் ஏனைய நிறுவனங்களுக்கு மாற்றப்படுவர் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.

அவர்களை இடமாற்றும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றார்.

ஊழல்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அதன் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

குற்றச்சாட்டுகளுக்குப் பின் அதன் ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் உட்பட 600 ஊழல் அதிகாரிகளை பிற அரசாங்க நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.