கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை
எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை