கடந்த 24 மணித்தியாலத்தில் வாகன விபத்துக்களால் 11 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்கள் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அவற்றில், நேற்று(15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மாத்திரம் 9 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துக்களில் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.