மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்தம் குறைபாட்டை நிவர்த்தி செய்த அரச அதிகாரிகள்

வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்தம் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்ததான முகாம் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
 வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு இரத்த தானத்தை வழங்கி வைத்தனர்.
 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவில் இரத்தங்கள்  தட்டுப்பாடு நிலவும் வகையில்  பிரதேச செயலாளரிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் குறித்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
 குறித்த இரத்ததான நிகழ்வில் செயலக உத்தியோகத்தர்கள் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குருதி நன்கொடை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.