பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை; ரவிகரனிடம் மாங்குளம் பொலிசார் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பிலே முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

நேற்று( 18)மாலை 07.00மணியளவில் ரவிகரன்அவர்களது இல்லத்திற்கு வருகைதந்த மாங்குளம் போலீசார் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மேலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி என்னும் பேரணியில்கலந்துகொண்டமைக்காக 15.02.2021 திங்களன்று ஏற்கனவே ரவிகரனிடம் முல்லைத்தீவு போலீசார் வாக்குமூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.