மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்- கோட்டாபய ராஜபக்ச

மக்களுக்குச் சார்பாகக் கொள்கை ரீதியான தீர்மானங்களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான இழுபறியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்டங்களைச் செயல்படுத்துவதில் வன விலங்கு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வீதிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களின் பொறுப்பான அதிகாரிகள் ஒரு கூட்டு முடிவுக்கு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் காணிப் பயன்பாடு குறித்து முறையான திட்டமிடல் இல்லாதது மக்களின் தவறு அல்ல. காணிப் பிரச்சினைகள் உட்படப் பல கிராமப்புற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்கும்போது அதிகாரிகள் களத்திற்குச் சென்று உண்மையான நிலைமையைப் பார்த்து தீர்மானங்களை எடுப்பது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்களுக்குச் சார்பாகக் கொள்கை ரீதியான தீர்மானங்களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள்.

இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நேற்றைய தினம் புத்தளம் மாவட்டத்தில் கருவலகஸ் வெவ பிரதேச செயலக பிரிவில் உள்ள பலீகம கிராம சேவகர் பிரிவில் உள்ள நெலும்வெவ சனசமூக நிலைய வளா கத்தில் இடம்பெற்ற 11 ஆவது ´கிராமத்துடன் உரையாடல்´ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.