காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

காரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவில்லை.

காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய பி.சி.ஆர்.பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

அதாவது, காரைநகர் சாலையில் பணியாற்றுபவர்களில் 90பேரின் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே, 8பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

அதனால் காரைநகர் சாலையிலிருந்து சேவையில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் இன்று இடம்பெறவில்லை.

இதேவேளை, காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில், அவர் நேற்று இடம்பெற்ற அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இ.போ.சவின் வடக்கு பிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகள் சார்ந்தோரால் நடத்தப்பட்ட இந்த கூட்டம், செயற்பாட்டு முகாமையாளரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் மேலும் சில உத்தியோகத்தர்கள் பங்கேற்றுள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.