மாகாண சபைத் தேர்தலை நடத்த நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம்! – அமைச்சர் தினேஷ்

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த அரசு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. அது சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, சட்டத்தில் மாற்றம் செய்யாமல் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.