வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் புத்தக விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை!

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் புத்தக விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது .

இன்று (16) காலை செட்டிகுளம் பிரதான வீதியிலுள்ள குறித்த விற்பனை நிலையம் திறப்பதற்கு சற்று முன்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தக விற்பனை நிலையத்தின் உரிமையாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார் .

இச்சம்பவத்திற்கு மின் ஒழுக்கே காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொதுமக்கள் தீயைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் .

நிழல்பிரதி இயந்திரம், குளிர்சானப்பெட்டி மேலும் பல பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளது . சம்பவ இடத்திற்குச் சென்ற மின்சார சபையினர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.