பேருந்தில் பயணம் மேற்கொண்ட முதியவர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக மரணம்

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணம் மேற்கொண்ட முதியவர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணியளவில், மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில், குறித்த முதியவரும் பயணித்துள்ளார்.

இதன்போது, மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள இராணுவ சோதனைச்சாவடியில் பேருந்து நிறுத்தப்பட்டு, சோதனைக்கு  உட்படுத்தப்பட்டது.

அவ்வேளையிலேயே, குறித்த முதியவர் பேருந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த முதியவரின் சடலத்தை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாதுகாப்பு பிரிவினர் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர் தொடர்பாக இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.