அம்பாறை விமானப்படை பரசூட் பயிற்சியின் போது விபத்து ;வீரர் ஒருவர் பலி

அம்பாறை உகன விமானப்படை முகாமின் பரசூட் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

இரத்மலானை விமானப்படை முகாமைச் சேர்ந்த படைத் தளபதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

8000 அடி உயரத்திலிருந்து குறித்த பரசூட் வீழ்ந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (20) காலை 8.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.