திருகோணமலை பத்தினிபுரப் பகுதியில் தொங்கி​ நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

[எப்.முபாரக்  ]
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று (21) மீட்கப்பட்டுள்ளதாகவும் நல்லூர் மூதூர் எனும் முகவரியைக் கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) எனவும் தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
ஆடு மேய்ப்பதற்காகக் குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன்  தாயுடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வருகிறது. குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்டநிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது கொலையா ?தற்கொலையா? எனச் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.