கல்முனை தொடக்கம் காரைதீவு வரையான கடற்கரை வீதி கார்பட் வீதியாக புனரமைப்பு

[எம்.என்.எம்.அப்ராஸ்]
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கத்திற்கமைய நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ்,அம்பாறை மாவட்ட கல்முனை தொடக்கம் காரைதீவு வரையான சுமார் 3.4 kmகடற்கரை வீதி காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினரும், வன ஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமல வீர திஸ்ஸாநாயக்கவின் இணைப்பாளர் றிஸ்லி முஸ்தபாவின் தலைமையில் சாய்ந்தமருது பெளசி மைதானத்தின் அருகில் இன்று (21)ஞாயிற்றுக்கிமை
இடம்பெற்றது.இதேவேளை குறித்த நிகழ்வின் அங்கமாககிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சினால் 1.5 மில்லியன் ரூபா செலவில் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘பிரதேச செயலகத்திற்கு ஒரு மைதான அபிவிருத்தி’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கடற்கரை பௌஸி மைதானத்தில்”மாயோன் லெஸர் ஸ்போர்ட்ஸ் ஸ்குயார்” எனும் புதிய கரப்பந்தாட்ட தொகுதிக்கான அடிக்கல் நடப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியு. டி . வீரசிங்க பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக்ராஜபக்ஷ கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிரில், பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.அப்துல் சமட்,பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ. வீரசிங்கவின் இணைப்பாளர்களான பி.எம்.எம். ஜௌபர்,எஸ் .எம் .ஜெஸில் மற்றும் றிஸ்லி முஸ்தபாவின் செயலாளர் ஜவாஹிர்,
வீதி அபிவிருத்திஅதிகாரசபையின் பிரதம பொறியலாளர் அலியார்,பொறியலாளர்எம்.ஐ.ரியாஸ்,உலமாக்கள் பொது ஜன பெரமுன முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள், விளையாட்டுக் கழக வீரர்கள், பொது மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.