வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையினை மேம்படுத்த நடவடிக்கை!

வட மாகாணத்திலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையினை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தீவுப்பகுதிகளில் தற்போது மிகவும் பழைய பேருந்துகளே பாவனையில் உள்ளதாகவும், இதன்காரணமாகவே புதிய பேருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அவை வட மாகாணத்திலுள்ள தீவு பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.