வேன், முச்சக்கரவண்டி நேருக்கு நேர் விபத்து…!ஒருவர் பலி!

ஹபரணை- பொலன்னறுவை பிரதான வீதியின் கிரிதலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹபரணையில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று எதிர்திசையில் வந்த வேன் வாகனமொன்றில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 41 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வேன் வாகனத்தின சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மொரொன்துடுவ ஶ்ரீ ஜயவர்தனபுர பிரதான விதியின் தெல்துவ பிரதேசத்தில் களுத்துறையில் இருந்து பண்டாரகம நோக்கி பயணித்த பேருந்தொன்றில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் வாத்துவை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.